திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக்
குறிப்பு :
அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி
நண்பர் கார்த்திக்.
*கண்களை சுற்றி மட்டும்
ஒட்டுண்ணி போல பேன்கள்*
இதற்கு கற்பூரத்தை தேங்காய் எண்ணையுடன் கலந்து
கண்ணைச் சுற்றியும் தலையிலும் கொண்டையிலும் தேய்க்க பூரணமாக அழித்து விடலாம்.
-இது திருவேங்கட சாமி அய்யாவின்
குறிப்பு.
*உடலில் இருக்கும் பேன்கள்:*
கோழி பீய்ச்சான் தழை அல்லது எருக்கன்
தழையை கூண்டில் ஆங்காங்கே போட்டால் கோழிப் பேன் வராமல் தவிர்க்கலாம்.
வசம்பு பொடி மற்றும் வெள்ளைப் பூண்டு
இரண்டையும் தண்ணீரில் கலந்து, மாதம் ஒரு முரை தண்ணீரில் முக்கி விட வேண்டும்.
வசம்பு பொடியை கோழி கூட்டில் தூவியும்
விடலாம்.
*அடை கோழிகளுக்கு பேன்
தொல்லை இருந்தால்*
வேப்ப எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெயையும்
சரிவிகிதத்தில் கலந்து இறக்கைக்கு அடியில், முதுகு பகுதியில் தேய்த்து விட
சரியாகும். வயிற்று பகுதியில் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் முட்டையில்
எண்ணெய் படுவது தவிர்க்கப் படுகிறது.
இதுவும் அய்யாவின் குறிப்புதான்.
என் புரிதல் தவறாக இருந்தால்
திருத்தவும்🙏🏼
-கார்த்திக்,
அலைப்பேசி எண் : +231 77 791 7607