Saturday, April 21, 2018

கோழி : அம்மை நோய் மருந்து : குளத்தூர் சக்தி

** கோழி அம்மை நோய் தீர்க்கும் முறைகள் ** 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

இது கோழிகளை எல்லாப் பருவத்திலும் தாக்கக்கூடிய ஒரு நச்சுயிரி நோயாகும்தொண்டைமூக்குதாடைச் சதைஅலகின் ஓரங்கள்வாய்கால்கள் ஆகிய  இடங்களில் கொப்புளங்கள் தோன்றிய பிறகு புண்ணாக மாறிப் பின் உலர்ந்து   உதிரும்.  நோயுற்ற கோழிகளை மற்ற கோழிகளிடமிருந்து தனிமைப்படுத்த   வேண்டும். 

வெளிப்பூச்சுக்கான மருந்து: 

பூண்டு 10 பல்
மஞ்சள் தூள் 10 கிராம்

துளசி இலை 50 கிராம்
கற்பூரம் 5 கிராம்
,   
வேப்பிலை 50 கிராம்
,
 சின்ன சீரகம் 20கிராம் 

ஆகியவற்றை நன்கு அரைத்து   விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயைச் சம அளவில் எடுத்து சூடுகாட்டிப் பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும் 

வாய் வழியாக 5 எண்ணிக்கை மிளகை இடித்துப் பின்சின்ன சீரகம் 10 கிராம்பூண்டு 5 பல்மஞ்சள் 5 கிராம், 10 வேப்பிலை, 10 துளசி இலைகள் கலந்து அரைத்து இக்கலவையை திவனம் அல்லது அரிசி   குருனையில் கலந்து கொடுக்கவும். 

அம்மை நோய் குணமாகும். 

குளத்தூர் சக்தி அலைப்பேசி எண் : 95003 50840

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...